202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

Share

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீன்பிடித் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான திலிபன ஜெயசூரிய மற்றும் முன்னாள் வீட்டுவசதி மற்றும் கட்டுமான பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்கவின் பணியாளரான இந்திக பண்டார விஜேசுந்தர ஆகியோரே கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

துறைமுக அதிகாரசபையில் தொழிலாளர் பதவியைப் பெறுவதற்காக சந்தேக நபர்கள் ஐந்து இலட்சம் ரூபாயை கோரியதாகவும், முன்னதாக இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும், தொழில் கிடைத்ததும் 2 இலட்சம் ரூபாயை கோரியதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share
தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....