09 A corruption
ஏனையவை

போதைப்பொருள் சோதனை போல நடித்து கொள்ளை: கேகாலையில் 40 பவுன் தங்கம் திருட்டு – 5 பேர் கைது!

Share

நாடு முழுவதும் போதைப்பொருள் சோதனையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதனை கொள்ளையர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கேகாலையில் வீடொன்றுக்குள் புகுந்து தங்கம் மற்றும் பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் நேற்று முன்தினம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 9 ஆம் திகதி, கேகாலை திக்கேனா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பொலிஸார் என்று கூறிக்கொண்ட மூன்று பேர் சென்றுள்ளனர்.

வீட்டில் போதைப்பொருள் இருப்பதாகவும், வீட்டை சோதனை செய்ய விரும்புவதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டை சோதனை செய்யும் போலிக்காரணத்தில் கொள்ளையடித்து விட்டு, வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய 40 பவுன் தங்க நகைகள்,1.5 மில்லியன் ரூபாய் பணம், ஒரு மோட்டார் சைக்கிள், 2 கையடக்க தொலைபேசிகள் மற்றும் பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 17,500,000 ரூபாய் ரூபாய் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முறைப்பாட்டிற்கமைய, அம்பாறை பகுதியில் 2 சந்தேக நபர்களும், எம்பிலிப்பிட்டியவில் 1 சந்தேக நபரும், கேகாலையில் உள்ள திக்கேன பகுதியில் தங்கியிருந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சந்தேக நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், தங்க சங்கிலி மற்றும் 3 தொலைபேசிகள் உட்பட பல திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சந்தேக நபர்கள் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 68f5bb1f9b4cc
ஏனையவை

மாகாண சபை தேர்தல் முறை பற்றி முடிவு பின்னர் அறிவிக்கப்படும்:நாமல் ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்து வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர்...

1717386794 images
ஏனையவை

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு22 பேர் உயிரிழப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

ஏனையவை

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

Rajinikanth Radhika Apte Actress இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான்...

download
ஏனையவை

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு...