download
ஏனையவை

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

Share

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்து ஜனாதிபதி பண்டிகைக் காலத்தில் நற்செய்தி கிடைக்கும் என்று கூறியதாகவும், ஆனால் அந்த எதிர்பார்ப்பு தற்போது தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஏற்கெனவே முதலாளிமார் சம்மேளன அதிகாரிகளுடன் தொழிலாளர் வேதனம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இன்று நடைபெற்ற வேதன நிர்ணய சபை கலந்துரையாடலில் முதலாளிமார் சம்மேளனம் கலந்துகொள்ளாதது, அரசாங்கத்தின் அழைப்பை உதாசீனம் செய்ததாகவே கருதப்படுகின்றது என்று சுரேஷ் தெரிவித்தார். இந்த விடயம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் ஒரு பெரிய தோல்வியைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 நாளாந்த வேதனம் தருவதாக அரசாங்கம் அளித்த உறுதிமொழியைத் தாங்கள் இன்னும் நம்பியிருப்பதாகவும், வருட இறுதிக்குள் ஜனாதிபதி கூறியதுபோல குறித்த வேதனத்தைப் பெற்றுத் தருவார் என நம்புவதாகவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...