10 17
இலங்கைசெய்திகள்

இஷாராவை புகழ்ந்து பாராட்டும் பிரதி அமைச்சர்

Share

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும் நீர் விநியோக பிரதி அமைச்சர் ரீ.பி சரத் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

பெண் என்ற வகையில் இஷாராவின் அறிவாற்றல் வியப்பிற்குரியது என அவர் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

இஷாரா குற்ற செயல்களுக்காக பயன்படுத்திய அறிவாற்றலை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தி இருந்தால் நாடு முன்னேறி இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிகந்த நவசேனபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

போதையற்ற நாடு அழகிய வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.

குற்றச்செயல் ஒன்று பின்னணியில் பெண் என்ற வகையில் இஷாரா பயணம் செய்த பாதை அவர் எவ்வளவு அறிவாற்றல் கொண்ட நபர் என்பதை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

அவரது இந்த ஆற்றல்களை நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பயன்படுத்தினால் எவ்வளவு நன்மைகள் கிடைக்க பெறும் என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

எனவே நாம் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன என பிரதி அமைச்சர் ரீ.பி சரத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...