13 7
இந்தியாசெய்திகள்

விஜயின் காணொளி அழைப்பு.. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி

Share

தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், கரூரில் தனது பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் காணொளி அழைப்பின் மூலம் உரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய், இதுவரை குறைந்தது ஐந்து குடும்பங்களுடன் பேசியுள்ளதாக தவெக தரப்பினர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த உரையாடலின் போது, ​​விஜய் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதாகவும் கரூர் நகருக்கு விரைவில் வருகை தந்து அனைவரையும் சந்திப்பதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி அன்று கரூரில் விஜய்யின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மற்றும் குறைந்தது 60 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த மறுநாள், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூபா 20 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபா 2 இலட்சமும் இழப்பீடு வழங்குவதாக விஜய் அறிவித்தார்.

அது மாத்திரமன்றி, தவெக தலைவர் விஜயின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணமும் நிறுத்தப்பட்டதுடன் அவருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது விஜய் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தை காணொளி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...