2 9
இலங்கைசெய்திகள்

கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விடுதி: வெளிநாட்டவர் கைது

Share

பௌர்ணமி விடுமுறை அன்று அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றை பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (06) இரவு இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி – காலி வீதியில் அமைந்துள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் பௌர்ணமி விடுமுறையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரவு நேர களியாட்ட விடுதியிலிருந்து மதுபான போத்தல்கள் மற்றும் சட்டவிரோத சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து இரவு நேர களியாட்ட விடுதியின் உயிமையாளரான சீன பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சீன பிரஜையை இன்று செவ்வாய்க்கிழமை (07) நீதிமன்றில் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...