ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை பகிரங்கமாக ஏலம் விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, குறித்த ஏல விற்பனை எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
தயா குரூப் லிமிடெட், தயா அப்பரல் எக்ஸ்போர்ட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், ஒலிம்பஸ் கட்டுமானம் (தனியார்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களே ஏல விற்பனையில் விடப்பட உள்ளன.
குத்தகை நிறுவனம் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய சுமார் 10 கோடி ரூபா தொகையை வசூலிக்கவே, இந்த மூன்று நிறுவனங்களையும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.