25 684db2d85251f
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!

Share

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டம் இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, சவுதி அரேபியாவிற்கும் முழு மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வடேபுல் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்து, அங்கு தனது பிரதிநிதியை சந்தித்த பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, மத்திய கிழக்கு பதற்றங்கள் குறித்து ரஷ்ய ஜனாாதிபதி வோலோடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருவரும் கலந்துரையாடிதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்! | Escalation Middle East German Warns

ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் ஒரு புதிய தொலைபேசி அழைப்பில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல்கள் குறித்து விவாதித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்போது ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை புடின் கண்டித்ததாகவும், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த விவாதங்களுக்குத் திரும்புவதை இரு தலைவர்களும் நிராகரிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன், இரு ஜனாதிபதிகளும் சுமார் 50 நிமிடங்கள் பேசியதாகவும் கூறப்படும் நிலையில் மத்திய கிழக்கின் போர்பதற்றத்தின் தீவிரத்தன்மை வெளிப்படுத்தப்படுகின்றது.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...