25 684db2d85251f
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!

Share

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டம் இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, சவுதி அரேபியாவிற்கும் முழு மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வடேபுல் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்து, அங்கு தனது பிரதிநிதியை சந்தித்த பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, மத்திய கிழக்கு பதற்றங்கள் குறித்து ரஷ்ய ஜனாாதிபதி வோலோடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருவரும் கலந்துரையாடிதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்! | Escalation Middle East German Warns

ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் ஒரு புதிய தொலைபேசி அழைப்பில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல்கள் குறித்து விவாதித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்போது ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை புடின் கண்டித்ததாகவும், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த விவாதங்களுக்குத் திரும்புவதை இரு தலைவர்களும் நிராகரிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன், இரு ஜனாதிபதிகளும் சுமார் 50 நிமிடங்கள் பேசியதாகவும் கூறப்படும் நிலையில் மத்திய கிழக்கின் போர்பதற்றத்தின் தீவிரத்தன்மை வெளிப்படுத்தப்படுகின்றது.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...