25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

Share

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிராந்தியத்தில் அவசர உதவிக்காக இராணுவ விமானங்கள் அனுப்பப்படுவதாக பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் நேற்று(13) ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நட்பு நாடுகளுக்கு இடையே இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்து குறித்த கலந்துரையாடல் அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பிரித்தானியா நீண்ட கவலைகளை கொண்டுள்ளது எனவும் இஸ்ரேலின் தற்காப்புக்கான உரிமையை அங்கீகரிக்கிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், போர் பதற்றம் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டும் என்பதில் தான் தெளிவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவில் நாளை தொடங்கும் G7 உச்சிமாநாட்டிற்கு செல்லவுள்ள நிலையில், நட்பு நாடுகளுடன் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் ஸ்டார்மர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...