25 684a4d1d711cc
இலங்கைசெய்திகள்

பொதுமன்னிப்பில் விடுதலையான கைதிகள் பட்டியலை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

Share

வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி கடந்த மே மாதம் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட 388 கைதிகளின் முழுப் பட்டியலை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பப்பட்ட கைதிகளின் பரிந்துரை பட்டியல் மற்றும் அவர் அங்கீகரித்த உரிய பட்டியல் இரண்டும் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

ஜனாதிபதியின் அனுமதி இல்லாமல் நிதி குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் உரிய முறையில் நடைபெற வேண்டும் எனவும் ஜனாதிபதி யார் யாருக்கெல்லாம் மன்னிப்பு வழங்க அங்கீகாரம் அளித்தார் என்பதை பற்றிய பொறுப்பும், மக்களுக்கு பதிலளிக்கும் கடமையும் இருக்க வேண்டும்,” என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...