25 683cbda46aae6
உலகம்செய்திகள்

நேட்டோவை குறிவைக்க காத்திருக்கும் ரஷ்யா..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட முக்கிய அதிகாரி

Share

2029ஆம் ஆண்டுக்குள் நேட்டோ நாடுகளின் கிழக்கு பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என ஜெர்மனியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் கார்ஸ்டன் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலுக்குத் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், ஆண்டுதோறும் 1,500 பீரங்கிகளையும் மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகளையும் உற்பத்தி செய்வது உட்பட ரஷ்யாவின் இராணுவ கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த இருப்புக்கள் உக்ரைன் போருக்கானது மாத்திரமல்ல எனவும் அவை நேட்டோ உறுப்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இருக்கலாம் எனவும் அவர் கருதுகின்றார்.

போலந்துக்கும் லிதுவேனியாவிற்கும் இடையிலான மூலோபாய ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பகுதியான சுவால்கி இடைவெளியை ரஷ்யா இலக்கு வைக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...