யாழில் 15 கிராம் ஹெரோய்ன் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சுன்னாகம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் நேற்று(31) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, வீடொன்று முற்றுகையிடப்பட்ட நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.