25 682d7f50bffcb
இலங்கைசெய்திகள்

தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலை : கடலுக்கு செல்வதை நிறுத்திய சிறு தொழிலாளிகள்

Share

யாழ் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் அதிகளவான கடற்றொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளனர்.

சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்கு நாளாந்தம் அதிகளவான கடற்றொழில் படகுகள் சென்று ஐம்பதாயிரம் கிலோவிற்கும் அதிகளவான மீன்களை பிடித்து வருவதால் சிறு தொழிலாளிகள் தங்களின் வருமானத்தை இழந்துள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழிலில் அதிகளவான மீன்கள் பிடிபடுவதால் சிறு தொழிலாளிகள் பிடிக்கும் மீன்களின் விலை சந்தைகளில் குறைந்துள்ளது.

இதனால் அதிகளவான கடற்றொழிலாளர்களின் படகுகள் கடலுக்கு செல்வதை நிறுத்தியுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

இந்த சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவோரை விளக்கமறியலில் வைப்பதுடன் அவர்களின் படகுகளும் தடுத்து வைக்கப்படுகின்றது ஆனால் வடமராட்சி கிழக்கில் அவ்வாறு இல்லை, கைது செய்யப்படுபவர்கள் உடன் விடுவிக்கப்படுவதால் தமது கடல் வளம் அழிந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கடற்றொழில் முறையை முற்றாக நிறுத்தி தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...