26 13
இலங்கைசெய்திகள்

மாலினியை அவமதித்த அரசாங்கம்..! ஆளும் தரப்பின் இரட்டை நிலைப்பாடு

Share

மறைந்த நடிகை மாலினி பொன்சேகா, உயிருடன் இருக்கும் போது அவரை அவமதித்து விட்டு இறந்தவுடன் அவருக்கு மரியாதை செலுத்துவது அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை இன்று(27.05.2025) சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாலினி பொன்சேகாவின் மருத்துவ செலவுகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நிதி வழங்கப்பட்டதாக அரசாங்கத்தின் தலைமை கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ, சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறிருக்க, மாலினி பொன்சேகா உயிரிழந்தவுடன் அவருக்கு அரச மரியாதை செலுத்துவது என்பது அரசாங்கத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்துவதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரச மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு அவர் மீது இழைக்கப்பட்ட அவமானங்களை மாற்றாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒரு உயர் பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரி, தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத நிலையில், ஜனாதிபதி நிதியிலிருந்து உதவி கோரினால், அரசாங்கத்தால் அதனை நிராகரிக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...