7 31
இலங்கைசெய்திகள்

கூட்டிணையும் முன்னாள் ஜனாதிபதிகளின் வாரிசுகள்..

Share

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனான தஹாம் சிறிசேனவை தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு தஹாம் சிறிசேனவை, நாமல் ராஜபக்ச அழைத்துள்ளார்.

முந்தைய தேர்தல்களிலும், தஹாம் சிறிசேன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டார்.

வலுவான அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதே இதன் நோக்கம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்து தஹாம் சிறிசேன இன்னும் எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை, மேலும் எதிர்காலத்தில் அவர் இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் பத்தரமுல்லையில் போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்னால் நடைபெற்ற போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் நாமல் ராஜபக்ச மற்றும் தஹாம் சிறிசேன ஆகியோர் இணைந்து கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...

02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...