8 31
இலங்கைசெய்திகள்

அதிகாரங்களை கைப்பற்ற அநுரவின் திட்டம் : இரகசிய கலந்துரையாடலில் அரசியல்வாதிகள்

Share

உள்ளூராட்சி சபை தேர்தல்களில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்கள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சி அமைப்புகளில் உள்ள முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன், எதிர்க்கட்சிகள் அதிக பெரும்பான்மையுடன் இருக்கும் சபைகளின் அதிகாரத்தை நிலைநாட்ட திட்டங்கள் வகுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதான எதிர்க்கட்சிகளுடன் கலந்ரையாடல் மேற்கொள்ளாமல் அரசாங்கத்தின் பிராந்தியத் தலைவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது அந்த உறுப்பினர்களின் ஆதரவை சுயாதீனமாக பெறுவதற்கான ஒரு முயற்சியாகும்.

மேலும், சுயாதீனக் குழுக்களுக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தவும், பெலவத்தை தலைமை அலுவலகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது மௌனக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் திரைக்கு பின்னால் இரகசிய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...