மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறையில் வைத்து அவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பாறை – உஹன பொலிஸ் நிலையத்தில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும், குழப்ப நிலையை தோற்றுவித்ததாகவும் தெரிவித்து சுமணரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.