தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் தான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரம் இது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை குறிப்பிட்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷண ராஜகருணா எம்.பி தவறான கூற்றொன்றை கூறியதாக தெரிவித்துள்ளார் எனவும் சந்திரசேகர் விளக்கியுள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக தான் சபையில் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா எம்.பி அதனை அவருக்குக் கூறியதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறு எதனையும் கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.