wedukunari
செய்திகள்அரசியல்இலங்கை

இந்து மத ஸ்தலங்களில் பௌத்த எச்சங்களால் சிக்கல்!

Share

பௌத்த எச்சங்கள், இந்து மத ஸ்தலங்களில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்கின்ற பொழுது அடையாளம் காணப்படுவதால் தான் பிரச்சினை என தொல்பியல் திணைக்கள பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அண்மைக் காலமாகவே இந்துக்கோவில் என்ற வகையில் பூசைகள் இடம்பெற்று வருகின்றது. ஆனால் அங்கு பௌத்த விகாரைகளின் சிதைவுகளே காணப்பட்டதாகத் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

இது ஒரு முக்கியத்துவமான பிரச்சனை என்ற வகையில் இனங்களிற்கிடையே பிளவை ஏற்படுத்தக்கூடாத வகையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வண்ணம் இந்த விடயத்தைப் பார்க்கவேண்டும்.

இந்து வணக்கஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில், ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற பொழுது பௌத்த சின்னங்களை அங்கு அவதானிக்க முடிகின்றது.

அவ்வாறான இடங்களில் புதிதான விடயங்களை திணிப்பதாக தவறான நிலைப்பாடு ஒன்றும் காணப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களமானது அனைத்து சமயங்களிற்கும் மதிப்பளித்து செயற்படும்.

பொதுமக்கள் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளது என்பது தொடர்பில் தமக்கு அறியத்தந்தால், அவ்வாறு பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...