21 11
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா

Share

துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நிலையில், ஒபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத பகுதிகளை இந்தியா தாக்கியது.

அதற்கு பதில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளையும் தடுத்தது.

இந்நிலையில் இந்த போரில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி உதவி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வியாபாரிகள், துருக்கியுடனான பல வியாபாரங்களை நிறுத்தியுள்ளனர்.

ஆனால் அதை பற்றி கவலைப்படதாக துருக்கி தனது பாகிஸ்தான் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இதுபற்றி அறிக்கை வெளியிட்ட துருக்கி ஜனாதிபதி எர்டோகன்,-“துருக்கி – பாகிஸ்தான் இடையேயான சகோதரத்துவம் உண்மையான நட்புக்கு சான்று.

உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே இப்படி ஒரு நட்புறவைக் கொண்டிருக்கின்றன. துருக்கியை போலவே பாகிஸ்தானிலும் அமைதி, ஸ்திரத்தன்மை உருவாக விரும்புகிறோம். கடந்த காலங்களை போலவே எதிர்காலத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்போம்” எனக் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...