drug arrest 1200x900 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதை வியாபாரம்! – KKS இல் இளம்பெண் கைது!

Share

காங்கேசன்துறை பொலிஸாரால் இளம்பெண் ஒருவர் (வயது-19) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மல்லாகத்தை சேர்ந்த குறித்த பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான பெண்ணின் கணவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கணவன் – மனைவி இருவரும் மல்லாகம் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். அங்கிருந்து வெளியேறிய அவர்கள் தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில் தங்கியிருகின்றனர் என அறிந்த பொலிஸார் அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பல நாள்களாக சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...

பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...

ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...

நிஸ்ஸங்க சேனாதிபதி
இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி!

இன்றைய தினம், எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....