6 14
உலகம்செய்திகள்

விமான நிலையங்கள் மீது பாகிஸ்தானின் தாக்குதல்..இந்தியாவின் அதிரடி நகர்வு

Share

இந்தியாவின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபோரா விமான தளத்தின் மீது பாகிஸ்தான் நடத்த முற்பட்ட ட்ரோன் தாக்குதலை இந்தியா தடுத்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவம் ஸ்ரீநகர் மற்றும் தென் காஷ்மீரின் அவந்திபோரா விமான தளத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது.

இருப்பினும், இந்தியா தனது அதிநவீன வான்வழி பாதுகாப்பு அமைப்புக்கள் மூலம் இந்த முயற்சியை வெற்றிகரமாக தடுத்து விட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை, ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பல இடங்களில் வெடிப்பு சத்தங்கள் எழுந்துள்ளன.

அத்துடன், சைரன் ஒலியும் ஒலிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மின்தடையும் நடைமுறைபடுத்தப்பட்டது.

இந்த தாக்குதல் கடந்த மூன்று நாட்களில் பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பாரிய முயற்சியாகும்.

வெள்ளிக்கிழமை மட்டும் இந்தியாவிலுள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்ரீநகர், பரமுல்லா, ஜம்மு, நாக்ரோட்டா, பத்தான்கோட், ஜைசல்மேர், பார்மர் உள்ளிட்டவை அடங்கும்.

கடந்த சில நாட்களில் 36 இடங்களில் பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களை இந்திய இராணுவம் தடுத்து, பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

பாகிஸ்தான் பக்க எல்லைப் பகுதிகளில் மூன்று நாட்களாக மோதி தாக்குதல் மற்றும் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் – ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து பல்வேறு வழிகளில் இந்திய இராணுவ கட்டிடங்களை குறிவைத்து தாக்க முயன்றாலும், இந்தியா அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

அதேவேளை, பாதுகாப்பு காரணமாக இந்தியா தற்காலிகமாக 24 விமான நிலையங்களை மே 150ஆம் திகதி காலை வரை மூடியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...