21 5
உலகம்செய்திகள்

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

Share

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த மின்னல் வேக தாக்குதல் நடத்தப்பட்டது.

வெறும் 25 நிமிடங்களில் 24 அதிநவீன ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடத்திய இந்த துல்லியமான தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்துர்”(Operation Sindoor) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி தாக்குதல் நேற்று அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வரை நடைபெற்றது.

புது டெல்லியில் நடைபெற்ற அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்தனர்.

ஏப்ரல் 22-ம் திகதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு “நிதானமான ஆனால் அதே நேரத்தில் தகுந்த பதிலடியாக” இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு நேபாளி நாட்டவர் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கை இந்திய ராணுவத்தின் போர் வியூகத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கர்னல் சோபியா குரேஷி குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மண்ணிலிருந்து மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எங்களது துல்லியமான உளவுத்துறை தகவல்கள் எச்சரித்தன.

ஆகையால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்கவும், முறியடிக்கவும் வேண்டியது இந்தியாவின் கட்டாயமாக இருந்தது.

இதன் காரணமாகவே இன்று அதிகாலை இந்தியா தனது பதிலடி உரிமையை மிகத் துல்லியமாக பயன்படுத்தியது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...