26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

Share

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்கள் இன்று சிங்கள குடியேற்றங்களுக்கான இடமாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அண்மைய நாட்களில் சம்பந்தன் ஐயா தலைமையில் பல பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் நாங்கள் இன்னும் முன்னேற முடியாத நிலையிலே உள்ளோம்.

நாங்கள் ஒப்பந்தங்களால் ஏமாற்றப்பட்டோம் ரணில் பிரபா ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தீர்வு கிடைக்கும் என நினைத்தோம் எல்லாமே எங்களுக்கு முன்னால் இல்லாமல் போனது.

மேலும் தெரிவிக்கயைில், காலம் காலமாக சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்டோம்.

அறவழிப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட போதே எமது இளைஞர் ஆயுதத்தை எடுத்தனர். குறிப்பாக, எங்களுடைய இறைமையை மீட்டெடுக்க போராடுகின்றோம்.

கடந்த 10ஆண்டுகளாக சம்பந்தன் தலைமையில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் நாம் ஒரு சாண் கூட முன்னேற முடியவில்லை.

28ஆம் திகதி வர்த்தமானி வெளிவந்திருக்கிறது. அரசு உரிமை கோராத காணிகளை சுவீகரிக்க முனைகிறது. இதில் சிங்கள குடியேற்றத்தை நிறுவ நினைக்கின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பலர் காணியின்றி உள்ளனர்.

பிமல் ரத்நாயக்கா கேட்கின்றார் உப்பின் பெயர் வேணுமா சுவை வேணுமா என்று எங்களுடைய மண்ணுக்குரிய பெயரை மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...