22
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து தங்கத்துடன் வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து, தீர்வை வரி செலுத்தாமல் வெளியேற முயற்சித்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் மத்தேகொட பகுதியில் வசிக்கும் 63 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

அவர் நேற்று காலை 07.30 மணிக்கு டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் வந்தடைந்தார்.

சந்தேக நபர் கொண்டு வந்த பைகளில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 தங்க சங்கிலிகள், ஒரு தங்கக் கட்டி, 03 வளையல்கள், ஒரு ஜோடி காதணிகள் மற்றும் கைசங்கியிகள், 06 மடிக்கணினிகள் மற்றும் 11 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு பிரதேச புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரான பெண் சட்டவிரோதமாக கொண்டு வந்த பொருட்களும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...