12 2
இலங்கைசெய்திகள்

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவே உள்ளூராட்சித் தேர்தலில் என்.பி.பி மும்மூரம் : சிறீதரன் பகிரங்கம்

Share

தமிழ் மக்கள் தம்மை அங்கீகரித்ததாக சர்வதேசத்துக்கு காட்டவே உள்ளூராட்சித் தேர்தலில் என்.பி.பி மும்முரமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் ( S. Shritharan) தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதன் ஊடாக, தமிழ் மக்கள் தங்களை அங்கீகரித்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை அல்ல என்றும் காட்டவே முயற்சிக்கின்றது.

இந்நிலையில், மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்களில் இலங்கையின் அரசு, இராணுவ நிர்வாகம் ஈடுபடவில்லை என்று நிரூபிப்பதற்கான ஜனநாயகத் தீர்ப்பாக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலைப் பயன்படுத்த எல்லாவகைப் பிரயத்தனங்களையும், மோசடிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...