21
இலங்கைசெய்திகள்

சி.ஐ.டியிடம் பிள்ளையான் அம்பலப்படுத்திய பெயர்!

Share

சி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அம்பலப்படுத்திய தகவல்களின்படி மேலும் பலரிடம் குற்றப்புலனாய்வு துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், அவருடன் சிறையில் இருந்த கலீல் என்ற புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த நபரை சிஐடியினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த குறித்த நபர், பிள்ளையானை என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

பிள்ளையானின் பெயரில் சில கடிதங்களை அவர் எழுதியுள்ளதாகவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையானுடன் இருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் எட்வின் சில்வா கிருஷ்ணன் ராஜா, ரங்கசாமி கனகநாயகம் மற்றும் வினோத் ஆகிய மூன்று பேரிடமும் எதிர்காலத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...