உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போர்நிறுத்தம்! ட்ரம்புக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு

Share
9
Share

பல மாதங்களாக நீடித்த கனிம ஒப்பந்த விவகாரம் தொடர்பிலான, சில மணி நேர பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக உக்ரைனும் அமெரிக்காவும் உறுதியளித்துள்ளன.

இது ரஷ்யா – உக்ரைன் முறுகலை தனிக்க ட்ரம்புக்கு கிடைத்துள்ள வாய்ப்பு என்றும ்கூறப்படுகிறது.

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“எங்கள் தரப்பு கையெழுத்திடத் தயாராக உள்ளது. உக்ரைனியர்கள் கனிம ஒப்பந்த மாற்றத்திற்கு தயாராக உள்ளனர்” என ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.

மேலும் உக்ரைனியர்கள் அதை மறுபரிசீலனை செய்வார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைனிய அதிகாரி ஒருவர் வாஷிங்டனுக்குச் சென்றதாகவும் ஆனால், அமெரிக்கா உக்ரைனை இரண்டு கூடுதல் ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இதன் காரணமாகவே இந்த ஒப்பந்தம் முன்கூட்டியே நிறைவேறப்படாத நிலை காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா அணுக அனுமதிக்கும் இந்த ஒப்பந்தம், ரஷ்யாவுடனான போரில் அமைதி தீர்வைப் பெற ட்ரம்புக்கு சிறந்த வாய்ப்பாகும் என கூறப்படுகிறது.

மேலும் உக்ரைன் தரப்பானது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகையுடனான உறவுகளை சரிசெய்ய ஒரு வாய்ப்பாக மாறும் என நம்பப்படுகிறது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...