24
உலகம்செய்திகள்

பக்தர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் உலகின் முதல் AI கடவுள்

Share

AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி வருகிறது.

AI யின் வளர்ச்சி காரணமாக தங்களின் வேலை பறிபோகும் என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது. தற்போது கடவுளுக்கு பதிலாகவும், AI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவின் ஜோகூரில் உள்ள தியான்ஹோ கோயில், உலகின் முதல் AI கடவுளை அறிமுகம் செய்துள்ளது. இந்த AI MAZU, சீனக் கடல் தெய்வத்தின் டிஜிட்டல் அவதாரமாகும்.

மலேசியாவை சேர்ந்த Aimazin என்ற தொழில்நுட்ப நிறுவனம், இந்த AI MAZU-வை உருவாக்கியுள்ளது.

டிஜிட்டல் திரையில் காட்டப்படும் இந்த AI கடவுள், பக்தர்களுடன் உரையாடல்களில் ஈடுபடவும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், வழிகாட்டுதலை வழங்கவும் செய்கிறது.

அந்த நிறுவனத்தின் நிறுவனரான Shin Kong, எதிர்பாராத செல்வத்தைப் பெறுவது எப்படி என AI மசுவிடம் கேட்டதற்கு, வீட்டிலேயே இருப்பது அத்தகைய செல்வத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என பதிலளித்தது.

இதனையடுத்து, தூக்கமின்மைக்கு தீர்வு வழங்குமாறு பெண் ஒருவர் கேட்டதற்கு, அவரது தனது குழந்தை என அழைத்த AI மசு, இரவில் உறங்க செல்வதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரை அருந்துமாறு அறிவுறுத்தியது.

ஏப்ரல் 20, 2025 அன்று மசு என்ற கடல் தெய்வத்தின் 1,065 வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு AI மசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் மெய்சோ தீவில், 960 ஆண்டில், லின் மோவாகப் பிறந்த பெண், கப்பல் விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றி, சொர்க்கத்திற்கு சென்றதாக நம்பும் மக்கள், மசு என்ற பெயரில் கடல் தெய்வமாக வணங்குகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த மசு கடவுளை வணங்குகின்றனர்.

Share
தொடர்புடையது
world 58
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2வது நாளாகவும் தொடர்ச்சி: பேச்சுவார்த்தையை நிராகரித்தார் சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...