24
உலகம்செய்திகள்

பக்தர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் உலகின் முதல் AI கடவுள்

Share

AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி வருகிறது.

AI யின் வளர்ச்சி காரணமாக தங்களின் வேலை பறிபோகும் என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது. தற்போது கடவுளுக்கு பதிலாகவும், AI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவின் ஜோகூரில் உள்ள தியான்ஹோ கோயில், உலகின் முதல் AI கடவுளை அறிமுகம் செய்துள்ளது. இந்த AI MAZU, சீனக் கடல் தெய்வத்தின் டிஜிட்டல் அவதாரமாகும்.

மலேசியாவை சேர்ந்த Aimazin என்ற தொழில்நுட்ப நிறுவனம், இந்த AI MAZU-வை உருவாக்கியுள்ளது.

டிஜிட்டல் திரையில் காட்டப்படும் இந்த AI கடவுள், பக்தர்களுடன் உரையாடல்களில் ஈடுபடவும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், வழிகாட்டுதலை வழங்கவும் செய்கிறது.

அந்த நிறுவனத்தின் நிறுவனரான Shin Kong, எதிர்பாராத செல்வத்தைப் பெறுவது எப்படி என AI மசுவிடம் கேட்டதற்கு, வீட்டிலேயே இருப்பது அத்தகைய செல்வத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என பதிலளித்தது.

இதனையடுத்து, தூக்கமின்மைக்கு தீர்வு வழங்குமாறு பெண் ஒருவர் கேட்டதற்கு, அவரது தனது குழந்தை என அழைத்த AI மசு, இரவில் உறங்க செல்வதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரை அருந்துமாறு அறிவுறுத்தியது.

ஏப்ரல் 20, 2025 அன்று மசு என்ற கடல் தெய்வத்தின் 1,065 வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு AI மசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் மெய்சோ தீவில், 960 ஆண்டில், லின் மோவாகப் பிறந்த பெண், கப்பல் விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றி, சொர்க்கத்திற்கு சென்றதாக நம்பும் மக்கள், மசு என்ற பெயரில் கடல் தெய்வமாக வணங்குகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த மசு கடவுளை வணங்குகின்றனர்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...