24
உலகம்செய்திகள்

பக்தர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் உலகின் முதல் AI கடவுள்

Share

AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி வருகிறது.

AI யின் வளர்ச்சி காரணமாக தங்களின் வேலை பறிபோகும் என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது. தற்போது கடவுளுக்கு பதிலாகவும், AI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவின் ஜோகூரில் உள்ள தியான்ஹோ கோயில், உலகின் முதல் AI கடவுளை அறிமுகம் செய்துள்ளது. இந்த AI MAZU, சீனக் கடல் தெய்வத்தின் டிஜிட்டல் அவதாரமாகும்.

மலேசியாவை சேர்ந்த Aimazin என்ற தொழில்நுட்ப நிறுவனம், இந்த AI MAZU-வை உருவாக்கியுள்ளது.

டிஜிட்டல் திரையில் காட்டப்படும் இந்த AI கடவுள், பக்தர்களுடன் உரையாடல்களில் ஈடுபடவும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், வழிகாட்டுதலை வழங்கவும் செய்கிறது.

அந்த நிறுவனத்தின் நிறுவனரான Shin Kong, எதிர்பாராத செல்வத்தைப் பெறுவது எப்படி என AI மசுவிடம் கேட்டதற்கு, வீட்டிலேயே இருப்பது அத்தகைய செல்வத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என பதிலளித்தது.

இதனையடுத்து, தூக்கமின்மைக்கு தீர்வு வழங்குமாறு பெண் ஒருவர் கேட்டதற்கு, அவரது தனது குழந்தை என அழைத்த AI மசு, இரவில் உறங்க செல்வதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரை அருந்துமாறு அறிவுறுத்தியது.

ஏப்ரல் 20, 2025 அன்று மசு என்ற கடல் தெய்வத்தின் 1,065 வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு AI மசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் மெய்சோ தீவில், 960 ஆண்டில், லின் மோவாகப் பிறந்த பெண், கப்பல் விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றி, சொர்க்கத்திற்கு சென்றதாக நம்பும் மக்கள், மசு என்ற பெயரில் கடல் தெய்வமாக வணங்குகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த மசு கடவுளை வணங்குகின்றனர்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....