11 1
சினிமாசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் பதற்றநிலைக்கு மத்தியில் சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை

Share

இந்தியாவுடன் நீடிக்கும் பதற்ற நிலைக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு அதிநவீன PL-15 ஏவுகணைகளை சீனா அவசரமாக வழங்கியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை (PAF) சீனாவின் மிகவும் உயர்தரமான PL-15 ஏவுகணைகளை அவசரமாக பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் விமானப்படை, தற்போது தனது புதிய JF-17 Block III போர்விமானங்களில் PL-15 Beyond Visual Range (BVR) ஏவுகணைகளை களஞ்சியப்படுத்தியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணைகள் சீன விமானப்படை இருப்பிடங்களில் இருந்து நேரடியாக வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

PL-15 ஏவுகணைகள், 200 – 300 கிமீ வரையான மிக நீண்ட தூரத்தை அடையக்கூடியவை. இது பாகிஸ்தான் விமானப்படைக்கு இந்திய விமானப்படையை (IAF) அதிக தொலைவில் இருந்து தாக்கும் திறனை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சீனாவின் PL-15, அமெரிக்காவின் AIM-120D மற்றும் ஐரோப்பியாவின் Meteor ஏவுகணைகளுடன் ஒப்பிடப்படுகிறது.

Meteor ஏவுகணைகளை இந்தியா தனது ரஃபேல் விமானங்களில் ஏற்றியுள்ளது. இருப்பினும், PL-15 ஏவுகணைகள் விரைவான வேகத்தையும் நீண்ட இலக்குகளை தாக்கும் திறனையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அபாயத்திற்கு எதிராக, இந்திய விமானப்படை ரஷ்யாவின் R-37M ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை பரிசீலிக்கிறது. இந்த ஏவுகணைகள் 300-400 கிமீ தூரத்தில் இலக்குகளை தாக்க முடியும்.

இதற்கிடையில், இந்தியா தனது உள்நாட்டு அஸ்திரா (Astra) Mk-III திட்டத்தையும் விரைவில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. புதிய அஸ்திரா ஏவுகணை 340 கிமீ தூரத்தில் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையில், இரு நாடுகளும் தங்கள் ஆயுதங்களைக் கொண்ட ஆக்கிரமிப்பு வலிமையை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...