21 1
இலங்கைசெய்திகள்

மீண்டும் நெருக்கடி! இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Share

மீண்டும் நெருக்கடி! இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மேலும், வார இறுதி நாளான இன்றும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் முதல் நாட்டில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

எனினும், நேற்றையதினம் இரவுடன் எரிபொருள் வரிசை ஓரளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எரிபொருளுக்கான வரிசை மீண்டும் ஏற்பட்டுள்ளது என்ற பிரசாரத்தை அறிந்து கொண்ட அதிகளவான மக்கள் எரிபொருள் நிலையங்களை நோக்கி படையெடுத்ததால் நிலைமை இன்னும் தீவிரமடைந்தது.

இதேவேளை, கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உரையாற்றிய, இலங்கை பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர், தங்களுடை பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் எரிபொருளுக்கான பற்றாக்குறை அதிகமாக இருக்கும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...