8 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை காரணமாக விபத்தில் காலை இழந்த முச்சக்கர சாரதி

Share

எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை காரணமாக விபத்தில் காலை இழந்த முச்சக்கர சாரதி

பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்ற பயத்தில் தனது முச்சக்கர வண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையம் சென்ற முச்சக்கர சாரதியொருவர், விபத்தொன்றில் இருகால்களையும் இழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த வௌ்ளிக்கிழமை(28) இரவு 10.30 மணியளவில் இரத்தினபுரி அருகே நடைபெற்றுள்ளது.

இரத்தினபுரி, ஹிதல்லன பிரதேசத்தைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இருகால்களையும் இழந்துள்ளார்.

பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டிக்குத் தேவையான எரிபொருள் கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக அவர் முச்சக்கர வண்டியில் எரிபொருள் நி​ரப்பு நிலையமொன்றை நாடி வந்துள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே வரிசையில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி நின்றிருந்த நிலையில், கவனயீனமாக செலுத்தப்பட்ட கார் ஒன்றினால் மோதுண்ட நிலையில், முச்சக்கர வண்டி சாரதி இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவரது இரண்டு கால்களும் நசுங்கிப் போயிருந்த நிலையில், வேறு வழியின்றி வெட்டியகற்றப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...