South Africa
செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

Share

T20 உலகக்கோப்பை போட்டியில் இன்று பங்களாதேஷுடன் தென்னாபிரிக்கா மோதியது.

முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் 18.2 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 84 ரன்களை எடுத்தது.

85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடியது.

முதல் 6பந்து வீச்சுகளில் ரீசா ஹென்றிக்ஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் .

பின் துடுப்பாடிய டி காக், 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

பவர் பிளே ஓவர்கள் முடிவில் 33 ரன்களுக்கு 3 இலக்குகளை இழந்திருந்தது.

பின்னர் அணியின் தலைவர் பவுமா உடன் 47 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் டுசென் (Rassie van der Dussen). 22 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

13.3 ஓவர்கள் முடிவில் 4 இலக்குகள் இழப்பிற்கு 86 ரன்களை எட்டியது தென்னாப்பிரிக்கா  இதன் மூலம் சூப்பர் 12 சுற்றில் மூன்றாவது வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் மூன்று இலக்குகளை வீழ்த்திய ரபாடா ஆட்ட நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...