3 48
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை! நடைமுறைக்கு வரும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

Share

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை! நடைமுறைக்கு வரும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

நீதிமன்றத்தினுள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் சிறைச்சாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொலைபேசி தொடர்பு தடுப்பு சாதனங்களின் (Jammer) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் ஏற்கனவே ஜாமர்கள் (Jammer)பொருத்தப்பட்டுள்ள நிலையில், கட்டடங்களின் தன்மை காரணமாக தொலைபேசி இணைப்புகளை முழுமையாக முடக்க முடியவில்லை என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பொருத்தப்பட்டுள்ள ஜாமர்களின் குறைபாடுகள் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தொலைபேசி இணைப்புகள் மூலம் வெளி தரப்பினருடன் உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் தங்கியிருந்து கைதிகள் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் குற்றச்செயல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஜாமர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளை சீரமைக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கும் பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பூஸ்ஸ போன்ற தீவிர சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளில் கையடக்கத் தொலைபேசிகளும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் 28 சிறைகள் உள்ளன, அவற்றில் 10 திறந்தவெளி சிறைகள். அந்த 28 சிறைகளில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 29,500. அவர்களில் 1,200 பேர் பெண் கைதிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...