8 47
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை குறித்த ஜனாதிபதியின் பதில்: எழுந்துள்ள கடும் விமர்சனம்

Share

சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரவை நோக்கி கேள்வி கேட்ட போது அவர் வழங்கிய பதில் ஜனாதிபதியின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபாகுகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “காணியில் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் தனிநபர் சட்டத்தை மீறி சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் நீதி வழங்குமாறு ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் அதற்கு ஆதரவு வழங்கும் மக்கள் பிரதிநிதிகளையும் பார்த்து மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்ட முயற்சிக்கின்றனர் என அப்பட்டமான பொய்யுரைக்கும் ஜனாதிபதி கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே தமிழர் தாயகப்பகுதியில் அரச சட்டவிரோத செயற்பாடுகளை மறைக்க முயற்சிக்கின்றார்.

இதன் மூலம் இதுவரை அரச இயந்திரம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளும் மத ஆக்கிரமிப்பு, இனவாத ஆக்கிரமிப்பு போன்றவற்றை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி ஆதரிக்கின்றாரா?

அநுர அரசாங்கம் தமிழர் தாயகத்தை இரண்டாக பிரித்து கிழக்கு மாகாணத்திற்கும் தமிழர்களுக்கம் தொடர்புகள் இல்லை என்ற உள்நோக்கில் மறைத்து வடக்கு மாகாணம் என்ற உரையாடலை முதன்மைப்படுத்துகின்றனர்.

ஜனாதிபதி சட்டவிரோத நடவடிக்கைக்கு நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக என்ன செய்வேன் என சொல்வதற்கு முதுகெலும்பற்று வடக்கு மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தீர்வு வழங்குவோம் என்பது வேடிக்கையாக உள்ளது.

ஆகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டத்தின் ஆட்சியை அரச இயந்திரத்தின் மூலம் வழங்கும் இயலுமையை ஜனாதிபதி வழங்க தயார் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
05 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வரி செலுத்துவோருக்கு ‘கோல்ட், சில்வர்’ கார்டு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்திய புதிய அதிரடி சலுகைத் திட்டம்!

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும்,...

04 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிவுல் ஓயா திட்டம்: நில அபகரிப்பிற்கு எதிரான கூட்டுப் போராட்டம் – யாழ். ஊடக அமையத்தில் சிவில் சமூகம் தீர்மானம்!

யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான முக்கியத்துவமிக்க திறந்த...

03
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகள்: தமிழக அரசின் குரல் என்றும் ஒலிக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நலனைப் பேணுவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை...

02
செய்திகள்உலகம்

2 நாட்களில் பயணம்: நிலவில் சுயசார்பு நகரம் அமைக்க ஈலோன் மஸ்க் அதிரடி திட்டம்!

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தலைவர் ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு...