11 29
இலங்கைசெய்திகள்

கந்தளாயில் இறந்த நிலையில் காட்டு யானை மீட்பு

Share

கந்தளாயில் இறந்த நிலையில் காட்டு யானை மீட்பு

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் இன்று (20) GPS கழுத்துப் பட்டிவுடன் இறந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கால்நடை பண்ணையார்கள் அளித்த தகவலின் பேரில் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிரித்தல்ல கால்நடை மருத்துவர் கலிங்கு ஆராய்ச்சி குறித்த பகுதிக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டனர் .

சுமார் 45 வயதுடைய பெண் காட்டு யானை என்றும், அது கல்லீரல் செயலிழப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த யானை மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும்,காட்டு யானை தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்படும் GPS கழுத்துப்பட்டி அணிந்திருந்தாகவும் கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...