2 35
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் மக்களை அச்சுறுத்தக் கூடாது – நாமல்

Share

அரசாங்கம் மக்களை அச்சுறுத்தக் கூடாது – நாமல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களை அச்சுறுத்தக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம்(17) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் மக்களை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களையும், பொதுமக்களையும் அரசாங்கம் ஒடுக்க முயற்சிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கிராமிய பிரதிநிதிகளுக்கு இந்த விடயத்தை அரசாங்கம் சொல்லிக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மாத்தளை, அகுரெஸ்ஸ மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ போன்ற பகுதிகளில் பொதுமக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...