1 25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனா எம்.பியின் தாக்குதல் : வெளியிட்டுள்ள தகவல்

Share

அர்ச்சுனா எம்.பியின் தாக்குதல் : வெளியிட்டுள்ள தகவல்

யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிசிரிவி காட்சிகளைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதால், விசாரணை நோக்கங்களுக்காக சிசிரிவி காட்சிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடி உடைந்ததால் ஏற்பட்ட சேதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடமிருந்து மீட்க ஹோட்டல் நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹோட்டலுக்கு வந்த ஒருவரைத் தாக்கியதாகவும், தனது சொந்தப் பாதுகாப்பிற்காகத் தான் அவரைத் தாக்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அத்தோடு, தண்ணீர் கிளாஸை கொண்டு அர்ச்சுனாவால் தாக்கப்பட்ட 30 வயது நபர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...