4 14
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்

Share

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் இன்று(08.02.2025) காலை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முகமது சாலி நழீம் தெரிவிக்கையில்,

“அரசியல் பிரச்சனை காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்னாள் எனது தந்தை மீதும் சகோதரர் மீதும் இன்று அதிகாலை 6.00 மணியளவில் கலீல் என்பர் தாக்குதல் மேற்கொண்டார்.

இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, காலையில் கொழும்பில் இருந்து வந்த நான் வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.

ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.

இதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாகனத்தைவிட்டு இறங்கி சென்ற போது பின்னால் வந்த காதர், என்மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கினார்.

பொலிஸ் நிலையத்துக்குள்ளும் அவர் என்னை தாக்க முற்பட்டபோது பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார், ‘அப்படி ஒன்றும் நடக்கவில்லை’ என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...

Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...