3 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

Share

கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் மாணர்வகளை கடவுச்சீட்டு பெற அனுப்புவதால், அந்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாடசாலை அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

அதன் காரணமாக குறித்த மாணவர்கள், கடவுச்சீட்டு பெறுவதற்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இல்லாமல் பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தலைமை அலுவலகத்திற்கு வருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு, சில மாணவர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்திற்கு பிரவேசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவ்வாறன சூழ்நிலைகளில் திணைக்கள அதிகாரிகள் பெரும் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...