3 55
இலங்கைசெய்திகள்

மாயமான 15 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

Share

மாயமான 15 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

ஜனவரி 2 ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயது ஜேசன் முகமது என்ற சிறுவனை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சிறுவனின் தயார் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் படி, அவர் காணாமல் போனது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவன் 121/05A, மஃபூர் கிரசண்ட், களுத்துறை தெற்கு என்ற முகவரியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜேசன் முகமது, சுமார் 5 அடி உயரம் மற்றும் மெலிந்த உடல், நீண்ட முகம், சுருக்கமாக வெட்டப்பட்ட முடி மற்றும் லேசான தாடி கொண்டவர் என காவல்துறை அடையாளங்களை வெளியிட்டுள்ளதுடன், காணாமல் போன போது அவர் வெள்ளை சட்டை மற்றும் கால்சட்டையை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தோரை  களுத்துறை தெற்கு காவல் நிலையம் 071-8591691 மற்றும் களுத்துறை காவல்துறை தலைமையகம் 034-2222222 அல்லது 034-2222223 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...