3 55
இலங்கைசெய்திகள்

மாயமான 15 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

Share

மாயமான 15 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

ஜனவரி 2 ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயது ஜேசன் முகமது என்ற சிறுவனை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சிறுவனின் தயார் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் படி, அவர் காணாமல் போனது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவன் 121/05A, மஃபூர் கிரசண்ட், களுத்துறை தெற்கு என்ற முகவரியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜேசன் முகமது, சுமார் 5 அடி உயரம் மற்றும் மெலிந்த உடல், நீண்ட முகம், சுருக்கமாக வெட்டப்பட்ட முடி மற்றும் லேசான தாடி கொண்டவர் என காவல்துறை அடையாளங்களை வெளியிட்டுள்ளதுடன், காணாமல் போன போது அவர் வெள்ளை சட்டை மற்றும் கால்சட்டையை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தோரை  களுத்துறை தெற்கு காவல் நிலையம் 071-8591691 மற்றும் களுத்துறை காவல்துறை தலைமையகம் 034-2222222 அல்லது 034-2222223 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...