3 55
இலங்கைசெய்திகள்

மாயமான 15 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

Share

மாயமான 15 வயது சிறுவன்: பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

ஜனவரி 2 ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயது ஜேசன் முகமது என்ற சிறுவனை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சிறுவனின் தயார் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் படி, அவர் காணாமல் போனது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவன் 121/05A, மஃபூர் கிரசண்ட், களுத்துறை தெற்கு என்ற முகவரியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜேசன் முகமது, சுமார் 5 அடி உயரம் மற்றும் மெலிந்த உடல், நீண்ட முகம், சுருக்கமாக வெட்டப்பட்ட முடி மற்றும் லேசான தாடி கொண்டவர் என காவல்துறை அடையாளங்களை வெளியிட்டுள்ளதுடன், காணாமல் போன போது அவர் வெள்ளை சட்டை மற்றும் கால்சட்டையை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தோரை  களுத்துறை தெற்கு காவல் நிலையம் 071-8591691 மற்றும் களுத்துறை காவல்துறை தலைமையகம் 034-2222222 அல்லது 034-2222223 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...