நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல் மற்றும் வங்கி முதலான 12 முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment