20 26
இலங்கைசெய்திகள்

கொழும்பு- பதுளை தொடருந்து பயணிகளால் மாதந்தோறும் குவியும் கழிவுகள்

Share

கொழும்பு- பதுளை தொடருந்து பயணிகளால் மாதந்தோறும் குவியும் கழிவுகள்

கொழும்புக்கும் (colombo)பதுளைக்கும்(badulla)இடையில் ஓடும் தொடருந்துகளில் இருந்து மாதந்தோறும் சுமார் 20,000 வெற்று கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்படுவதாக தொடருந்து நிலைய ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் தொடருந்தில் பயணிக்கும் பயணிகள் தாம் பயன்படுத்திய பிறகு, இருக்கைகள் மற்றும் பிற இடங்களில் வெற்று பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போத்தல்களை விடுகின்றனர்.

இவ்வாறு விடப்படும் போத்தல்களை பதுளை தொடருந்து நிலைய ஊழியர்கள் தொடருந்து நிலையத்தில் பாதுகாப்பாக சேகரித்து வெளி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.

வெற்று தண்ணீர் போத்தல்கள், பீர் கான்கள் மற்றும் மது போத்தல்கள் ஆகியவை பெரும்பாலும் அப்புறப்படுத்தப்படும் பொருட்களில் அடங்கும் என்றும், பயணிகள் ஓடும் தொடருந்துக்கு வெளியே கழிவுகளை வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...