கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதனையடுத்து, பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் நாட்டில் அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களுக்கு பாரிய தடுப்பாடு ஏற்படலாம் என ஊடக பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொருட்கள் தட்டுபாடு காரணமாக விலை அதிகரிக்குமெனவும், தற்போது வரையிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை ஏற்றிவந்த கொள்கலன் துறைமுகத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக குறைந்தபட்சம் 100 – 110 மில்லியன் டொலர் பணம் மாதாந்தம் செலவிடப்படுகின்றது.
#SrilankaNews
Leave a comment