2 42
ஏனையவை

கேஜிஎப் யாஷ், நயன்தாரா நடிக்கும் படத்திற்கு வந்த சிக்கல்.. அதிரடி காட்டிய அரசு

Share

கேஜிஎப் யாஷ், நயன்தாரா நடிக்கும் படத்திற்கு வந்த சிக்கல்.. அதிரடி காட்டிய அரசு

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்த யாஷ், கேஜிஎப் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். இதற்குமுன் ஏராளாமான படங்களில் இவர் நடித்திருந்தாலும், கேஜிஎப் படம்தான் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேஜிஎப் யாஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம்தான் டாக்சிக். இப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து இணையத்தில் வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பின்போது, பெங்களுருவில் உள்ள வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அரசு அனுப்பியிருக்கும் இந்த நோட்டீஸிற்கு படக்குழு அளிக்கும் பதிலை வைத்துதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...

thumbs b c 5027e373e0f532f509cd40063f3ea6cb
ஏனையவை

லிபியா போலல்லாமல், இலங்கையின் பழமையான ஜனநாயகத்தைப் பேண வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்!

இலங்கை ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம் மிக்க நாடு என்றும், லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை...