இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கமெங் நதி நீர் கறுப்பாக மாறியதோடு பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து வருகின்றன.
இதற்கு சீனாவின் நாசசெயல் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுயுள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதியில், சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் தண்ணீரின் நிறம் கறுப்பாக மாறியதாகவும், நீர்வாழ் உயிரினங்களுக்கு இறப்பதாகவும் நதிக் கரையோரத்தில் வாழும் இந்திய கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இறந்து மிதக்கும் மீன்களை சாப்பிட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர் கறுப்பாக மாறியதற்கான காரணத்தை உடனடியாக அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என மக்கள் இந்திய அரசை கோரிக்கையுள்ளனர் .
அதோடு கடந்த 2017ஆம் ஆண்டு, SIANG ஆற்றின் நீர் கறுப்பாக மாறிய போதும், சீனாவின் சதி என இந்தியா குற்றம்சாட்டியது .
அதற்கு இதற்கு சீனா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
#india
Leave a comment