19 13
இலங்கைசெய்திகள்

வெளியான எச்சரிக்கை

Share

இலங்கை மத்திய வங்கியின் ஒப்புதலுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என்ற பெயரில் நிகழ்நிலை மூலம் வேலைவாய்ப்பு மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அது தொடர்பான விளம்பரத்தில், குறித்த வேலையை வீட்டில் இருந்தே செய்யலாம் என்றும் ஒரு நவீன கையடக்க தொலைபேசி அல்லது மடிக்கணினி மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வேலையை வட்ஸ்அப் மூலம் இணைக்க முடியும் என்றும், தினமும் மேற்கொள்ளப்படும் பகுதி நேர வேலையின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.17,500 முதல் 46,000 வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதில் ஈடுபடுபவர்கள் பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட கணக்கில் ரூ. 2,000 வைப்பிலிட வேண்டுமென்றும் அதன் பிறகு மோசடியாளர்கள் இணைக்கப்பட்ட தொலைபேசி இணைப்பை துண்டிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த இணைய மோசடியில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...

சேனக்க பல்லேதென்ன
இலங்கை

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர்!

சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக இன்று முதல் அமுலுக்கு...