19 13
இலங்கைசெய்திகள்

வெளியான எச்சரிக்கை

Share

இலங்கை மத்திய வங்கியின் ஒப்புதலுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என்ற பெயரில் நிகழ்நிலை மூலம் வேலைவாய்ப்பு மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அது தொடர்பான விளம்பரத்தில், குறித்த வேலையை வீட்டில் இருந்தே செய்யலாம் என்றும் ஒரு நவீன கையடக்க தொலைபேசி அல்லது மடிக்கணினி மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வேலையை வட்ஸ்அப் மூலம் இணைக்க முடியும் என்றும், தினமும் மேற்கொள்ளப்படும் பகுதி நேர வேலையின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.17,500 முதல் 46,000 வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதில் ஈடுபடுபவர்கள் பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட கணக்கில் ரூ. 2,000 வைப்பிலிட வேண்டுமென்றும் அதன் பிறகு மோசடியாளர்கள் இணைக்கப்பட்ட தொலைபேசி இணைப்பை துண்டிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த இணைய மோசடியில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...