15 24
இலங்கைசெய்திகள்

1 மில்லியனை கடந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

Share

1 மில்லியனை கடந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த வருடம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.

டிசம்பர் முதல் பாதியில் மட்டும், 97,115 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் மாதத்தில் இதுவரை 193,471 முதல் 229,644 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

குறிப்பாக டிசம்பர் முதல் பாதியில், 21,174 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.

மேலும், ரஷ்யாவில் இருந்து 13,762 சுற்றுலா பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 7,417 சுற்றுலா பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 6,574 சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர்.

2023ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து 385,267 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 180,414 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 166,999 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

இந்நிலையில், முதற்கட்டமாக இந்த ஆண்டு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும், பல மாதங்களாக தொடரும் விசா பிரச்சினைகள் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு இடையூறாக இருந்ததுடன், இது இந்த இலக்குகளை அடைவதை ஓரளவு பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...