2 18
இலங்கைசெய்திகள்

யாழில் மோசமான நிலையை எட்டியுள்ள காற்றின் தரம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

யாழில் மோசமான நிலையை எட்டியுள்ள காற்றின் தரம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணம்(Jaffna) மாவட்டத்தின் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, குறித்த மாவட்டத்தின் காற்றின் தரச்சுட்டெண் 154 முதல் 160 வரையான மட்டத்தில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்குத் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளதா என நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று(17) உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறான விசாரணையின் போது யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் சுற்றாடல் அமைச்சர் மற்றும் ஏனைய குழுவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதேவேளை, கொழும்பு, கண்டி, காலி மற்றும் வட மாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...