24 13
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி கிளிநொச்சியில் கடத்தப்பட்டதால் பரபரப்பு

Share

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி கிளிநொச்சியில் கடத்தப்பட்டதால் பரபரப்பு

யாழ்ப்பாணத்தைச்(jaffna) சேர்ந்த யுவதி ஒருவர் கிளிநொச்சியில்(kilinochchi) வைத்து கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவன் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதியே வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கிளிநொச்சி இரணைமடுச்சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் நேற்று (16) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அழகுக்கலை நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தவர்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார்.

இந்த நிலையில் வழமை போன்று குறித்த யுவதி தங்கும் இடத்துக்கு திரும்புகையில் வான் ஒன்றில் சென்ற குழுவினர் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த யுவதியின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....